ஐஸ்வர்யா தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மூத்த மகள். தனுஷ் அவர்களை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் இருந்தார் ஐஸ்வர்யா.
தனுஷின் திருடா திருடி படத்தை பார்த்தபின் தனுஷின் தீவிர ரசிகனான ஐஸ்வர்யா வாழ்க்கைத் துணையாகவும் ஆசைப்பட்டார் இந்த விஷயத்தை ரஜினி காதுக்கு கொண்டு செல்ல ரஜினியும் தனுஷ் குடும்பத்தினரிடம் பேச அதன் பின் ஒருவழியாக தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது.
ஐஸ்வர்யா நல்ல பாடகரும் கூட ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசைதான் என்ற பாடலை பாடியவரில் ஒருவர். ஐஸ்வர்யா தான் அதே படத்தில் ரீமா சென்னுக்கு குரல் கொடுத்ததும் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தான்.
2012ஆம் ஆண்டு 3 என்ற படத்தை தனது கணவர் தனுஷை வைத்து இயக்கினார் அனிருத்துக்கு முதல் படம் இசையில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். 3 படத்தில் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தது. குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.
3 படம் வெளியானது அந்தப் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் எடுத்தது போல் இல்லை செல்வராகவனின் படம் போன்று இருந்தது. 3 படத்தில் முதன்முதலாக அமலாபால் தனுஷ் இருவரையும் வைத்து தான் படத்தை எடுத்தார் ஐஸ்வர்யா அதன்பின் ஒரு சில காரணங்களால் அமலா பாலுக்கு பதில் சுருதிஹாசன் அவர்களை நடிக்க வைத்தார்.
அந்தப் படத்தில் தனுஷ் ஸ்ருதி கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது காட்சியமைப்பில் செல்வராகவன் போல் எடுத்துவிட்டு கதையை கோட்டை விட்டு விட்டார் ஐஸ்வர்யா அதன்பின் வை ராஜா வை என்ற படத்தை இயக்கியவர் தற்பொழுது செல்வராகவனுடன் இணைந்து சில படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.
தந்தையைப் போல சினிமாவில் அதிகம் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனுசுக்கு இரு மகன்கள் உள்ளனர் தற்போது தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் ஐஸ்வர்யா தனுஷ் தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சைக்கிளில் செல்வது, யோகா பயிற்சி செய்வது என்று பயிற்சிகள் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.