சான் பிரான்சிஸ்கோ பெங்களூரு இடையிலான ஏர் இந்தியாவின் இடைநிறுத்தம் இல்லாத விமானத்தை முழுக்க பெண் விமானிகளை வைத்து இஐக்கி உள்ளனர்.
சான்பிரான்சிஸ்கோக்கும் பெங்களூருக்கும் இடையிலான வான் வழி தூரம் உலகின் மிக நீளமான ஒன்றாகும். 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் விமானம் சேவையை தொடங்க திட்டமிட்டது அதுபடி ஏர் இந்தியாவின் AI 176 விமானம் நேற்று இரவு 8 .30 மணிக்கு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை 3:45 மணிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்து தரையிறங்கியது.
இதில் என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் என்றால் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட வான் வழி பாதையில் விமானத்தை ஓடியது பெண் விமானிகளாம். நீண்டதூரம் பனிபடர்ந்த வழியே விமானத்தை திறமையாக ஓட்டி வந்து பெங்களூரில் நிறுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்கள் பெண் விமானிகள்.
நீண்ட தூரம் விமானத்தை ஓட்டுவதற்கு ஆண் விமானிகளை மட்டுமே நம்பாமல் பெண் விமானிகள் மூலமும் நீண்ட தூரம் விமானத்தை இயக்க முடியும் என்று எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
இதுகுறித்து ஏர் இந்தியா இந்நிறுவனம் இந்தியாவில் பெண் சக்தி உலகம் முழுவதும் உயரமாக பறக்கிறது. ஏர் இந்தியா விமானத்தை முழுக்க முழுக்க பெண்களாகவே இயக்க திட்டமிடப்பட்டு இந்த சேவையை தொடங்கியுள்ளோம்.
பெண் விமானிகளை நீண்ட தூரம் பறந்தது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று பெருமிதம் பட்டனர்.
அக்கினி சிறகே எழுந்து வா என்று பாராட்டிவருகின்றார் மக்கள்.