அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி காலமானார். அவர் இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.
சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். விஜயலட்சுமி மறைவு ஓபிஎஸ் அவர்களது மகன் ஓ.ரவீந்திரநாத் ஆகியோருக்கும் குடும்பத்தாருக்கும் அதிமுக கட்சியின் இருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு கட்சியினரும் அரசியல் தலைவர்களும் பன்னீர்செல்வம் மனைவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை அறிந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.