Friday, May 17, 2024
-- Advertisement--

கணவரின் கொடுமையால் நடிகை சமந்தா கருகலைப்பு செய்தாரா..? விவரகத்துக்கு இதுதான் காரணமா..? பரபரப்பு ஏற்படுத்திய பிரபலத்தின் ட்வீட்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் போது இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

அதுவே நாளடைவில் காதலாக மாறியது. இதை அடுத்து இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தமிழில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொண்ட நான்கு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து பல தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் அதை பற்றிய உண்மை என்பது இதுவரை சமந்தா தரப்பும், நாக சைதன்யா தரப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய விமர்சகரான உமர் சந்து சமந்தாவின் விவாகரத்து குறித்து பரபரப்பான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் சமந்தாவை பொருத்தவரை நாக சைதன்யா மிகவும் மோசமான கணவர் என்றும் அவரால் உடலளவிலும், மனதவிலும் சமந்தா டார்ச்சர் அனுபவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமந்தா கர்ப்பமாக இருந்ததாகவும் நாக சைதன்யா செய்த தொல்லையால் கரு கலைப்பு செய்து கொண்டதாகவும் உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles