அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா நடித்த புஷ்பா திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா உட்பட பலர் இதிலும் நடித்து வருகின்றனர்.
இப்படம் துவங்கும் முன்பு சாய் பல்லவி இதில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை படக்குழு மறுத்து வந்தது. இந்த நிலையில் சாய்பல்லவி நடிப்பது உறுதியாகியுள்ளது. மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண்ணாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.
இதற்காக வெறும் பத்து நாட்கள் மட்டும் சாய் பல்லவி கால்ஷீட் கொடுத்து உள்ளாராம். இதனால் படத்தின் அவருக்கு சிறுவேடன் என்றும் அவர் கொல்லப்படுவதாக காட்சி இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. மே மாதம் அவர் புஷ்பா 2 படப்பிடிப்பில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் பாகம் போல இரண்டாம் பாகத்திலும் ஒரு கவர்ச்சி பாடல் இடம்பெற செய்யவும், அதில் பிரபல நடிகையை நடிக்க வைக்கவும் படகுகளோ திட்டமிட்டுள்ளது. அந்த பாடல் கட்சியில் பாலிவுட்டை சேர்ந்த ஒரு நடிகையின் நடிக்க வைக்க முயன்று வருகின்றனர்.