நடிகை ரோஜா ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ரோஜா இரவும் பகலுமாக சூட்டிங் சென்று செம பிஸியாக இருந்தாராம் ஒரு நேரத்தில்.
தற்பொழுது அரசியலில் தீவிர கவனம் செலுத்திவரும் ரோஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன இதுகுறித்து அவரது கணவர் ஆர்கே செல்வமணி கூறியது ரோஜா அவர்கள் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துள்ளார்.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார் தற்போது அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்கள் இந்த செய்தி வெளியானவுடன் ரோஜாவின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.
ரோஜாவின் உடல்நிலை பற்றி அவருடைய கணவர் ஆர்கே செல்வமணி ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் ரோஜாவுக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் உடல்நிலை சரியாகி விடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாக கூறியுள்ளார் அதை தொடர்ந்து பேசிய அவர் தற்போது ரோஜா அவர்கள் மருத்துவ மனையில் சிறப்பு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரைப் பார்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை அவருக்கு போன ஆண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக அதை தள்ளி வைத்து இருந்தோம்.
ரசிகர்கள் யாரும் ரோஜாவை பார்ப்பதற்காக வரவேண்டாம் வந்தாலும் மருத்துவமனையில் அனுமதி கிடையாது என்பதை ரோஜாவின் கணவர் வாட்ஸ்அப் ஆடியோ வழியாக தெரிவித்துள்ளார்.