தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடி பறந்த நடிகையை தான் நடிகை ரோஜா 150 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து அதன் பின்னர் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.
ஆந்திராவில் பிறந்த ரோஜா தமிழில் கொடிக்கட்டி பறந்த காலத்தில் திரைப்பட இயக்குனரான செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது ரோஜாவிற்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சினிமாவில் சாதித்த ரோஜா அரசியலில் சாதிக்கவும் களமிறங்கியுள்ளார் தற்பொழுது ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா தனது மூத்த மகள் அன்சுமாலிகாவை சினிமாவில் அறிமுகம் செய்ய போவதாக செய்திகள் சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது.
ரோஜா மகளுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருவதாகவும் ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் ரோஜாவிடம் அணுகி உங்களின் மகளை நடிக்க வையுங்கள் என்று கேட்பதாகவும் தகவல்.
ரோஜா மகளின் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது அதனை பார்த்த ரசிகர்கள் அம்மாவை மிஞ்சிய அளவில் மகள் இருக்கிறாரே இவர் சினிமாவிற்கு வந்தால் கண்டிப்பாக இவருக்கு ரசிகர் கூட்டம் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள்.
விரைவில் ரோஜாவின் மகளை திரையில் எதிர்ப்பார்க்கலாம் என்கிறார்கள் சினி வட்டாரத்தினர்.