Sunday, May 19, 2024
-- Advertisement--

சன் டிவி.. கலைஞர் டிவியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிக்கு வரும் நடிகை ராதிகா சரத்குமார் ..!! எதற்காக தெரியுமா ..?

80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகையாக இருந்தவர் நடிகை ராதிகா. அதனை தொடர்ந்து நடிகர் சரத்குமாரை திருமணம் செய்த பிறகு அண்ணி, அம்மாவிடங்களில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் வெற்றி கண்ட ராதிகா சீரியலிலும் வெற்றி கண்டார். சித்தி என்ற சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் ராதிகா தற்பொழுது கலைஞர் டிவியில் பொன்னி C /O ராணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில ஷோகளில் பங்கு பெற்றுள்ளார். சன் டிவியில் தொகுப்பாளனியாகவும் பணிபுரிந்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார் சன் டிவியில் சித்தி, வாணி ராணி, செல்லமே, என பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ராதிகா சரத்குமார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் இந்த சீரியலில் தளபதி விஜயின் தந்தை பிரபல இயக்குனரான எஸ். ஏ சந்திரசேகர் நடிக்க உள்ளாராம்.

இந்த சீரியலுக்கான காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இந்த சீரியலுக்கான ப்ரமோ விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles