கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிகை ப்ரியாமணி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி இரு குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து 2017 திருமணம் செய்தார். இவரின் முதல் மனைவி ஆயிஷா தற்போது ஒரு பேட்டியில் முஸ்தப்பா “என்னை விவாகரத்து செய்யவில்லை” அவரது இரண்டாவது திருமணம் செல்லாது என கூறியுள்ளார்.
இதற்கு முஸ்தபா 2013-இல் நாங்கள் விவாகரத்து பெற்று விட்டோம். பணம் பறிக்க ஆயிஷா முயற்சிக்கிறார். பிரியாமணியுடன் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஏன் இப்படி சொல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.