ஓவியா இயக்குனர் சற்குணம் அவர்களின் களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் . துருதுருவென இருக்கும் கிராமத்து பெண்ணாக அந்த படத்தில் நடித்திருப்பார். களவாணி படத்தில் கிடைத்த பிரபலம் தொடர்ந்து ஓவியாவிற்கு படவாய்ப்புகள் வந்தது.
ஓவியாவை பொறுத்தவரை யார் என்ன சொன்னால் என்ன என் வேலையை நான் சரியாக செய்வேன் நான் ஜாலியாக தான் இருப்பேன் எத்தனை பேரை வேணலும் காதலிப்பேன் பப்புக்கு செல்வேன் என்று ஓப்பனாக டைப் கேரக்டர்.
முதலில் கவர்ச்சி காட்டாமல் சமத்து பிள்ளையாக நடித்துவந்த ஓவியா கொஞ்சம் கொஞ்சமாக சினிமா மார்க்கெட்டை புரிந்துகொண்டு தாராளம் காட்ட ஆரம்பித்தார். ஓவியாவின் சினிமா கேரியர் சற்று சறுக்கிக் கொண்டே போக திடீரென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் ஓவியா ஆர்மி என்று ஆரம்பித்து இணையத்தை ரசிகர்களும் தெறிக்க விட்டனர்.
பிக்பாஸ் க்கு பிறகு ஏகப்பட்ட படங்கள் ஓவியா புதிய படவாய்ப்புகள் வந்தது ஆனால் ஓவியா சம்பந்தமே இல்லாமல் 90 ML என்ற சர்ச்சை படத்தில் நடித்தார்.
அதன் பின் சரியான கதைக்காக வெயிட் பண்ண ஓவியா தற்பொழுது பிரபல காமெடி நடிகர் யோகிபாபு உடன் ஜோடியாக நடிக்கிறார் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை வருகிற 24-ஆம் தேதி நடத்த உள்ளார்கள்.
யோகி பாபு காட்டில் தான் இப்போ மழை முதலில் நயன்தாரா இப்போ ஓவியா கலக்குங்க தலைவரே என்று கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்