ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் நிவேதா பெத்துராஜ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து “டிக் டிக் டிக்”, பொன் மாணிக்கவேல், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தமிழன் உள்பட தமிழ் படங்களில் நடித்து வந்தார். பார்க்க அழகா இருந்த இவருக்கு தமிழில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு உள்ளது என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் என்று அம்மணி தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினர். தெலுங்கு படம் என்றால் சும்மா விடுவார்களா சில ஹீரோவுடன் நெருக்கமான காதல் காட்சிகள் மற்றும் டூயட் காட்சிகளில் நடித்தே ஆக வேண்டும். குறிப்பாக அம்மணி அங்கு கொஞ்சம் தன்னுடைய கண்டிஷன் எல்லாம் தள்ளிப்போட்டுவிட்டு கொஞ்சம் தாராளம் காட்டினார். பெத்த தூட்டும் சம்பாரித்து வந்தார்.
இந்நிலையில் கவர்ச்சியாக ஒரு படத்தில் நடித்தது குறித்து அவர் கூறியிருப்பது:
நான் முதலில் குடும்பபாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தேன். தெலுங்கில் ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தேன் அதுவும் என்னுடைய COMFORT ZONE இருந்து கொஞ்சம் தள்ளி அந்த படத்தில் நடித்து இருந்தேன், ஆனால் அதைப் பார்த்துவிட்டு வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை.
என்னுடைய பெற்றோர்கள் புரிந்து கொண்டார்கள். மேலும், தான் உறுதியாக இருக்கிறேன். இனி இதுபோன்ற கவர்ச்சியான படங்களில் நடிக்க கூடாது என்றும், படத்தை பார்க்கும் போது தன் அப்பா அம்மாவும் முகம் சுளிக்கும்படி இருக்க கூடாது என்று நினைவில் வைத்திருப்பதாகவும் நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.