Sunday, May 19, 2024
-- Advertisement--

செல்ல பிராணியால் கையில் கடி வாங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்…!!! ரத்த கரையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நல்ல புதுமுக நடிகை மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

நிவேதா பெத்துராஜ்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் இவருடைய ஹோம்லியான முகத்தோற்றம் பல ரசிகர்களை கவர்ந்தது. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து “பொதுவாக என் மனசு தங்கம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து “டிக் டிக் டிக்” என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “திமிருபிடித்தவன்”, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நிவேதா நடித்துள்ளார்.

அதன்பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்குவில் நிறைய படவாய்ப்புகள் நிவேதாவிற்கு குவிந்தது.

கடைசியாக பிரபுதேவவுடன் இணைந்து பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் முகில் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

நிவேதா பெத்ராஜ் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை டி.சிவா தயாரித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடுவது வழக்கம். அதனுடன் இணைந்து புகைப்படம் வெளியிடுவது வழக்கம் அதே போல் நிவேதா பெத்துராஜ் தன் செல்ல பிராணியுடன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். அதில் அவருடைய பூனை நிவேதாவை காயப்படுத்தி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நிவேதக்கு என்னாச்சு? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles