நஸ்ரியா சிறுவயதிலிருந்தே நடிக்கத் தொடங்கிய இவர் கேரளத்தில் உள்ள ஒரு பிரபல சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் “நேரம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதோடு அட்லி இயக்கத்தில் வெளியான “ராஜா ராணி” என்ற படத்தில் கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
ராஜா ராணி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் பிரபலமான நஸ்ரியா தமிழில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நடிகர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்த நஸ்ரியா தனுஷுடன் நய்யாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு வாயை மூடி பேசவும் என்ற படத்தில் துல்கர் சல்மான் அவர்களுக்கு ஜோடியாக நடித்த நஸ்ரியா பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். அதில் மீண்டும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இன்று தனது 27வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும் நஸ்ரியாவிற்கு பல்வேறு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.