நதியா தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகிகளில் இவரும் ஒருவர். பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நதியா தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து பிரபலம் அடைந்தார். கவர்ச்சியை தவிர்த்த நதியா இன்றுவரை கவர்ச்சி வேடத்தில் நடிக்காதது இவர் மீது பெரிய மதிப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது.
ஒரு நேரத்தில் நதியா போல உடை உடுத்த வேண்டும், நதியா போல கம்மல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த பெண்களும் இருந்தார்களாம். தனது ஹோம்லியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நதியா ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ராஜாதி ராஜா படத்தில் நடித்திருந்த அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது அதுபோல நடிகர் சுரேஷ் அவர்களுடன் இணைந்து நிறைய படங்கள் நடித்து இருந்தார். அந்தப் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியும் பெற்றது.
1988ஆம் ஆண்டு ஷிரிஷ் என்பவரை நதியா திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் வாழ்ந்த நதியாவிற்கு சனம் மற்றும் ஜனா என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளார்கள்.
திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு சற்றே விலகி இருந்து நதியா எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து மறுபடியும் தமிழ் படங்கள் மற்றும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நதியா தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு சில புகைப்படங்கள் பார்க்க இவர் நதியாவா அல்லது நதியாவின் மகளா என்னும் அளவிற்கு ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது அந்த அளவிற்கு நதியா என்றும் இளமை குறையாமல் இருக்கிறார்.
இந்த வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் நதியா ஒன்றை வெளியிட்டு உள்ளார். தனக்கு எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறாராம். அது போல நல்ல புத்தகங்களை விரும்பிப் படிப்பாராம் தனக்கு நேரம் கிடைக்கும் போது சைக்கிளில் செல்வார். சமீபத்தில் அவர் வெளியிட்ட உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.