Thursday, May 2, 2024
-- Advertisement--

என் மீது செருப்பை எறிந்தார்கள். முந்தானையை பிடித்து இழுத்தார்கள்..!!! ஸ்டாலினிடம் கெஞ்சினேன். ஜெயலலிதாவிற்கு நடந்து போல எனக்கும் நடந்தது- குஷ்பு வருத்தம்.

குஷ்பு தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு தற்போது ஜெயலலிதா பாணியில் பிரச்சாரங்களில் பேசி வருகிறார்.

பிரசாரத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு திமுகவை விட்டு ஏன் விலகினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார் அதில் திருச்சிக்கு ஒரு கல்யாணத்திற்கு சென்று இருந்தேன் அப்போது என்னை திமுகவில் இருக்கும் பெண்கள் அனைவரும் கேவலமாக பேசினார்கள். என் மீது செருப்பை வீசினார்கள். என்னுடைய முந்தானையை பிடித்து இழுத்தார்கள் அந்த நேரத்தில் நான் பதறிப்போய் ஸ்டாலின் அவர்களிடம் கெஞ்சினேன் அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறினேன் ஆனால் அவர் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் இப்போது பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்.

அதன் பின் என் வீட்டில் கல்லெறிந்தார்கள் அப்பொழுது எனது 2 மகள்கள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்கள் உடனே ஸ்டாலினிடம் தயவுசெய்து காப்பாத்துங்க என்று கதறினேன் கெஞ்சினேன் கட்சிக்காரர்கள் வழியாக ஸ்டாலினிடம் சொல்லச் சொன்னேன் ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டார்.

kushbhu thousand light

இந்த செயலை செய்த ஸ்டாலின் எப்படி தமிழ் நாட்டுப் பெண்களை எப்படி காப்பாற்றுவார் இந்த செய்தி கலைஞருக்கு சென்றபின் தான் என்னை பத்திரமாக சென்னையில் இருந்து ஹைதராபாத் அனுப்பி வைத்தார். கலைஞர் என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் நானும் அவர் மீது அன்பும் பெரிய மரியாதையும் வைத்துள்ளேன்.

ஏன் திமுகவை விட்டு வெளியேறினேன் என்பதை தேர்தலில் ஜெயித்து விட்டு சொல்கிறேன் என்று கூறிய குஷ்பூ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல பிரச்சார மேடைகளில் மக்களைப் பார்த்து கேட்டு வருகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles