Monday, May 20, 2024
-- Advertisement--

எனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – நடிகை குஷ்பு..!!!

சிறுவயதில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பூ மும்பையில் பத்திரிக்கையாளர் பர்க்கா தத் உடனான பெண் மைய உரையாடலில் பங்கேற்று இருந்தார். அப்போது தனது சிறு வயது துயரத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். மீடு மூலம் பிரபல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துயரத்தை பகிர்ந்து வருகின்றன நிலையில் தற்போது குஷ்பூ அதில் இணைந்துள்ளார்.

நடிகை குஷ்பூ கூறுகையில் அவர் ‘ஆணா, பெண்ணோ குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். பின்னர் வாழ்க்கை முழுவதும் அந்த கசப்பான பாதிப்பு இருக்கும். 8 வயது சிறுமியாக இருந்தபோது நானும் எனது தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்.

மனைவியை அடிப்பதும் ஒரே மகளிடம் தவறாக நடந்து கொள்வதும் பிறப்புரிமை என்று எனது தந்தை இருந்தார். எனது குடும்ப உறுப்பினர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்ததால் பல ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். எனக்கு நேர்ந்த துயரத்திற்கு எதிராக போராடும் துணிச்சல் அப்போது இல்லை.

15 வயதில் நான் அந்த துணிச்சல் எல்லாம் வந்தது. என் தந்தை பொறுப்பில்லாத தந்தையாக இருந்தார். எனது 16 வயதில் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles