Monday, May 20, 2024
-- Advertisement--

பாஜக கட்சியில் இருந்து கொண்டே சொந்த கட்சியினரையே குற்றம் சாட்டும் நடிகை குஷ்பூ…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்றைய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா ஆகிய இருவரும் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த வாகனம் ஒன்று விவசாயிகள் நின்றிருந்த கூட்டத்தில் திடீரென பாய்ந்து விபத்து ஏற்படுத்தியது.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ஆசாமிகள் மீது வாகனத்தை ஏற்றி கொன்றது கொடுமையான குற்றம். எந்த விதத்திலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிரை விட எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம் என்று தெரிவித்துள்ளார். சொந்தக் கட்சியினரே குஷ்பூ கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles