குஷ்பு ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு உள்ளார்.
மூன்று மாதங்களாக தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை சந்தித்து வந்த குஷ்பு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கோஷங்களை எழுப்பி வந்தார். தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் குஷ்பூ திடீரென்று ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.
அதில் என்னுடைய கணவர் சுந்தர் சி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் தற்போது அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாரெல்லாம் அவரை தொடர்பு கொண்டாரோ அவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொண்டு உடனடியாக பரிசோதனை செய்யுங்கள் என்று கூறிய அவர் என் கணவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.