காஜல் அகர்வால் தெலுங்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தன்னுடைய நண்பரும் குடும்ப நண்பருமான கவுதம் கிச்சலு என்பவரை 30 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா காலகட்டம் என்பதனால் தனது வீட்டிலேயே திருமணத்தை முடித்து கொண்ட காஜல் தேனிலவிற்கு மாலத்தீவிற்கு சென்று தனது கணவருடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் காஜல் துபாய் சென்று தனது பொழுதை கழித்து வருகிறார் அங்கு எடுத்த ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தார் ரசிகர்கள் காஜலுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். சில ரசிகர்கள் அவரது உடல்வாகை பற்றியும் உடல் அமைப்பைப் பற்றியும் தவறான கோணத்தில் பதிவிட்டு வந்தனர். இதனை பார்த்த காஜல் கர்ப்பகாலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்றும் உடல் மீது அக்கறை பற்றிய விஷயங்களை பகிர்ந்தார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் முக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மேலும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. நடிகை காஜல் அகர்வாலின் வளைகாப்பு புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் குட்டி காஜலை காண ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட் செய்த வருகின்றனர்.