Sunday, May 19, 2024
-- Advertisement--

சிவசங்கர பாபாவை பொது இடத்தில் வைத்து மக்கள் செருப்பால் அடிக்க வேண்டும் காவல்துறைக்கு நடிகை கோரிக்கை.

சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முன்னாள் மாணவிகள் அடுக்கடுக்காக புகார்கள் வைத்து வந்தனர்.

கேளம்பாக்கத்தில் உள்ள சுகில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் என்ற பள்ளியை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிவசங்கர பாபா நான் தான் கடவுள் நான் கிருஷ்ணன் என்று தன்னைத்தானே கூறிவந்தார். அதுமட்டுமல்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தேர்வு எழுதுவதற்கு முன்பு தனது அறைக்கு வரவழைத்து ஆசீர்வாதம் செய்வது போல அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார் இந்த போலி சாமியார்.

அந்தப் பிஞ்சு குழந்தைகளை அப்படி செய்தது மட்டுமல்லாமல் தொடக்கூடாத இடங்களை தொட்டு கேவலமான செயல்களை செய்துள்ளார். இதனைப் பற்றி அந்த மாணவிகள் அங்கு உள்ள சில ஆசிரியர்களிடம் கூறியதற்கு பாபா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வார் அவரைப் பற்றி தப்பாக சொல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

நல்வழியில் அழைத்து செல்பவர்களே ஆசிரியர்கள் இவரைப் போன்றவர்கள் ஆசிரியர்களே கிடையாது அதுமட்டுமல்லாமல் சிவசங்கர் பாபா நான் கிருஷ்ணன் நீங்களெல்லாம் கோபிகா என்று பள்ளி மாணவிகளை டேட்டிங் அழைத்து சென்று சாக்லேட் மற்றும் மதுக்கள் வழங்கி குடிக்க வைத்து அவர்களை தன் சொல்பேச்சு கேட்க வைத்துள்ளார்.

தன் பிள்ளைகள் எப்படியாவது படித்து ஒரு நல்ல டாக்டராக மாட்டார்களா கலெக்டராக மாட்டார்களா அல்லது இன்ஜினியராக மாட்டார்களா என்று கனவில் பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்கிறார்கள் ஆனால் மாணவ மாணவிகளை நல்ல வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய இதுபோன்ற ஆட்களே இப்படி நடப்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் சிவசங்கர பாபாவை பிடிப்பதற்காக மும்முரம் காட்டி வந்தனர். சிவசங்கர பாபா தனக்கு நெஞ்சுவலி என்று ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளி வந்திருந்தது. எஸ்கேப் ஆக மொட்டை அடித்துக்கண்டு அடையாளம் தெரியாதபடி ஆளே மாறிப் போன சிவசங்கர் பாபாவை போலீசார் மடக்கி பிடித்தனர் அதன் பின் கைது செய்தனர்.

தற்பொழுது அங்கு விசாரணைகள் முடித்து சென்னைக்கு வர இருக்கும் சிவசங்கர பாபா மீது கடும் கோபத்தில் உள்ளனர் மக்கள் இந்நிலையில் நகைச்சுவை நடிகை ஆரத்தி தமிழக காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார் அதில் அந்த எச்ச சாமியாரை இரண்டு நாள் பொது இடத்தில் நிற்க வையுங்கள் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த குழந்தைகள், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அவரை செருப்பால அடிக்கிறோம் பிறகு உங்கள் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று கூறியுள்ளார் ஆரத்தி.

இவர் மட்டுமல்ல தமிழக மக்களே தற்பொழுது சிவசங்கர பாபாவின் இந்த கேவலமான செயலை பார்த்து கடும் கோபத்தில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles