தமிழில் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று . இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் அபர்னா பாலமுரளி. இவர் தெலுங்கு படத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.
தமிழில் இவர் நடித்த முதல் படமே பெருமளவில் வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பும் அந்தப் படப் படத்தில் அபர்ணா பேசும் வீரவசனமும் மக்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு சில ஒரு சில பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பட ப்ரமோஷனுக்காக சென்ற அபர்ணா கல்லூரி இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்கும் பொழுது மிகவும் நெருக்கமாக சென்றார்.
இதனால் அபர்ணா மேடையிலேயே மிகவும் மன வேதனை அடைந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து அந்த இளைஞன் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அந்த இளைஞன் அபர்ணாவிற்கு மன்னிப்பு தெரிவிப்பதாகவும் அறிவிப்பு வந்தது.
இதனைத் தொடர்ந்து அபர்ணா பல பேட்டிகளில் எனக்கும் கிளாமருக்கும் செட்டாகாது, கிளாமர் உடை அணிவது என் உடல் வாகுக்கு செட்டாகாது என பல பேட்டிகளில் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் இணைய பக்கத்தில் வெள்ளை நிற உடை அணிந்து கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ சூட் வைரலாகி உள்ளது.