கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்கள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து இன்றோடு ஒரு மாதம் ஆக இருக்கும் நிலையில் கர்நாடகாவில் இன்றும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அவரது ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து விட்டு இந்த உலகத்தை விட்டு சென்ற புனித் ராஜ்குமார் அவர்களின் மரணத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி நடிகர்களும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
புனித் ராஜ்குமார் படங்களில் நடித்து சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்தோம் என்று இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு படிப்புக்கு உதவி வந்துள்ளார். இவர் செய்த உதவிகள் சக நடிகர் நடிகைகளுக்கு கூட சில விஷயங்கள் தெரியாதாம் அந்த அளவிற்கு தான் செய்யும் உதவி பிறருக்குத் தெரியக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாராம் புனித்.
புனித் அவர்களின் இறுதி அஞ்சலிக்கு ரசிகர்கள் திரண்டு கர்நாடகாவை ஸ்தம்பிக்க வைத்தது அனைவரும் அறிந்த ஒன்றே. புனித் அவர்களின் சமாதிக்கு நேரில் சென்று தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் சிவகார்த்திகேயன் அவருடைய குடும்பத்தை சந்தித்து சில நாட்களுக்கு முன் பேசினார். புனித் கூட சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை பார்த்து சிரித்து ரசித்தாராம்.
அவருடைய குடும்பத்துடன் பேசிவிட்டு புனித் ராஜ்குமார் அவர்களின் சமாதிக்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் சிவகார்த்திகேயன் அவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதி நேரில் சென்று அவருடைய சமாதியில் அஞ்சலி செலுத்தி வந்தார்.
சில பிரபலங்கள் வீடியோ மூலமாக அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகிபாபு அவர்கள் இன்று காலை புனித் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு அவருடைய சமாதிக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செய்து திரும்பியுள்ளார்.
புனித் அவர்களின் தொட்டு கும்பிட்டு அஞ்சலி செய்த யோகிபாபு கண்கள் கலங்கி இருந்தது.