புனித் ராஜ்குமார் சினிமா திரை உலகத்தையே இவரது மரணம் பெரிய துயரத்தில் ஆழ்த்தியது. ஒரு நடிகனாக மட்டும் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல் வாழும் காலங்களில் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து தனது இறுதி அஞ்சலியில் அப்பு அப்பு என்று ரசிகர்கள் கண்ணீருடன் சத்தங்களை பெற்றவர்.
புனித் ராஜ்குமார் அவர்கள் மறைந்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்த திரண்ட கூட்டமே கர்நாடகாவை ஸ்தம்பிக்க வைத்தது. ரசிகர்கள் பேசும் போது அவர்களுக்கு பின்னே நின்று கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்திய அவர் மரணம் என்ற பெரிய அதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு கொடுத்துச் சென்றிருக்கிறார்.
புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு தமிழ் நடிகர்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாவிட்டாலும் சமூக ஊடகங்கள் மூலம் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வந்தனர்.
சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி உதயநிதி ஸ்டாலின் மேலும் சில நடிகர்கள் புனித் அவர்களின் சமாதிக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்துவந்தனர். மேலும் புனித அவர்கள் படிக்க வைத்து வந்த மாணவர்களின் கல்விச் செலவை தான் தொடர்ந்து செய்கிறேன் என்று நடிகர் விஷால் ஒப்புக்கொண்டார்.
சமீபத்தில் கர்நாடகா சென்ற விஷால் இந்த விஷயத்தை கர்நாடக முதல்வர் மற்றும் புனித் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றும் கலந்து கொண்ட விஷால் மேடையில் பேசியது “இறந்த செய்தி கேட்டவுடன் பெரிய அதிர்ச்சியாக இருந்தது தாங்க முடியவில்லை. புனித் இன்னும் கண்முன் நிற்கிறார் என்று மேடையில் பேசிய விஷால் இங்கு புனித் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தில் இருக்கிறார்கள் சிவா அண்ணா இருக்கிறார்கள் கர்நாடக முதலமைச்சர் இருக்கிறார்கள் மற்றும் கன்னட ஸ்டார்ஸ் இருக்கிறார்கள் அவர்கள் முன்னிலையில் எனக்கு ஒரு அவகாசம் தேவை.
இது நான் பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை பணம் இருக்கிறது என்பதற்காக செய்யவில்லை. நிஜமா சொல்கிறேன் எனக்கு சொந்தமாக வீடு கூட இல்லை நான் என்னுடைய அப்பா அம்மா வீட்டில் இருக்கிறேன் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது அதற்காக பணம் சேர்த்து வந்தேன் தற்போது அந்த வீட்டை அடுத்த வருடம் கூட கட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன் இனி புனித் ராஜ்குமார் அவர்கள் படிக்க வைத்த பிள்ளைகளின் கல்வி செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் அவர் விட்டு சென்ற இந்த பணியை செய்ய முயற்சி செய்கிறேன்.
இந்தப் பிள்ளைகள் படித்தால் புனித் பெயர் இந்த ஜென்மம் மட்டுமல்ல எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் நிலைத்து நிற்கும் என்று கூறினார் எங்கோ ஓரிடத்தில் புனித் ஆத்மா பார்த்துக்கொண்டிருக்கும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தப் புனித் அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றால் நாம் அவர் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் ” என்று விஷால் எமோஷனலாக பேசியுள்ளார்.