Monday, May 6, 2024
-- Advertisement--

வீட்டிற்க்கு போக முடியாமல் தவித்த 11 பெண்களை பத்திரமாக வீடு அனுப்பிய தளபதி விஜய்..! குவியும் பாராட்டுக்கள்..!

கொரானோ வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சிலர் வெளியூர்களுக்கு சென்று சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அந்த இடத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். அதுபோல தேவிகா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்களும் ஒரு திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சில காலம் கோவில்களிலும் பேருந்து நிலையங்களும் வாழ்ந்து வந்தவர்கள், கையில் கையில் உள்ள பணம் எல்லாம் செலவான நிலையில் வாழ வழியின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் தேவிகா மற்றும் அவர் குடும்பத்தினர் விஜய் தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்றம் நிர்வாகியிடம் தங்கள் நிலையை கூறியுள்ளனர். உடனடியாக அவர் அகில இந்திய ரசிகர் மன்றம் தலைவர் புஸீ ஆனந்திடம் இந்த தகவலை கூறியுள்ளார்.

இந்த தகவல் நடிகர் விஜயிடம் சென்றடைந்த அடைந்த உடனே நடிகர் விஜய் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மன்ற ரசிகர்களிடம் அந்த 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து அரசிடம் முறையான அனுமதி பெற்றபின் அந்த 11 பெண்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பத்திரமாக அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தப் பெண்களில் சிலர் 20 வயதை விட குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது நடிகர் விஜயின் இந்த செயல்படுத்தத் பாராட்டத்தக்க வகையில் இருந்ததால் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles