கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது தொடர்ந்து பல நடிகர் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு குறித்து தங்களது சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். காமெடி நடிகர் வடிவேலு வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது கொரோனாவால் பீதி ஏற்பட்டுள்ளது வெளியே போகக் கூடாது. யாரையும் தொடக்கூடாது, கை கொடுக்க கூடாது என்கின்றனர்.
மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் விரட்டி வைத்துள்ளது கொரோனா இந்த மாதிரி யாருமே பார்த்ததில்லை என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்கப் போகிறார்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கு படம் எடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கு யாரும் தயாராக இல்லை? அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது. இறைவன் ஒருவனே என்ற ஒரு படத்தை தெறி செய்கின்றான்.
அந்த குறும்படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால் தான் எல்லோரும் வெளியே வரமுடியும். ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால்விட்டு அப்படி சும்மா இருந்து காட்டுபவன் ஆக நடித்து இருந்தேன். ஆனால் உண்மையில் எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்திருக்கிறான் இறைவன்.