Saturday, May 4, 2024
-- Advertisement--

மீண்டும் நம்மை சிரிக்கவைக்க சினிமாவில் களமிறங்கும் வடிவேலு…!!!

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதங்களிலேயே உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கொரோனா பொதுநிவாரணத்தொகை ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினார். அதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பொது நிவாரண நிதிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன் என்று கூறினார். மேலும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி உள்ளார். தமிழக முதலமைச்சர் தெருத்தெருவாக சென்று மக்களை சந்தித்து தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். தமிழக மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டுக்கொண்டார்.

தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார் மேலும் வடிவேலு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.ஒரத்தநாடு, ராம்நாடு நான் அரசியல் பேசவில்லை தமிழ்நாட்டு நன்றாக இருக்கிறது அதை ஏன் பிரிக்கவேண்டும் எனக் கூறினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் வடிவேலுவிடம் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டேர்களா என கேட்டதற்கு நான் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன் இன்னும் 40 ஊசி கொடுத்தாலும் போட்டுக் கொள்வேன் என கூறினார். அப்போது நீங்கள் பழையபடி அதிக படங்களில் உங்களை பார்க்கலாமா என்று செய்தியாளர் கேட்டபோது “கண்டிப்பாக நல்லதே நடக்கும்” என கூறினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles