சூர்யா சிவகுமார் அவர்களின் மகன் என்பதை தாண்டி தமிழ் சினிமாவில் கதைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் நடிகர்களில் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் தடுமாறிய சூர்யா பாலாவின் நந்தா, கௌதம் மேனனின் காக்க காக்க என்று தனது விஸ்வரூபத்தை எடுத்து படிப்படியாக தன்னை மாற்றிக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது ஆனால் சூர்யாவின் நேரமோ என்னமோ கொரோனா காலகட்டம் என்பதினால் அந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் அமேசானில் ரிலீஸ் செய்தார் சூர்யா.
கடைசியாக ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றியை சூர்யாவிற்கு தரவில்லை அது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் சற்று வருத்தமாக இருந்தாலும் சூரரை போற்று என்ற மாபெரும் வெற்றிப் படத்தை சூர்யா கொடுத்தார். படத்தைப் பார்த்த பல தரப்பு ரசிகர்களும் இந்த மாதிரி சூர்யாவை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் கதைக்கான நாயகன் தான் சூர்யா இதுபோல அவர் நடித்தால் அவருடைய படத்தை எல்லா ரசிகர்களும் விரும்பி பார்ப்போம் என்று தங்களது கருத்தினை தெரிவித்து வந்தனர்.
மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சூர்யா தற்பொழுது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தனது கவனம் முழுவதையும் செலுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனவினால் சூர்யா சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது சூர்யா ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் சூர்யா நீங்கள் உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நலம் பெற்று திரும்ப வர பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.