இம்மானுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் இதைப்பற்றி பேசி வருகிறார். சிவகார்த்திகேயன் ரொம்ப பாவம் இமான் முதல் மனைவி மோனிகா பதில்.
சிவகார்த்திகேயன் இமான் குடும்பத்தில் விளையாண்டாரா இமான் மனைவிக்கும் சிவாவுக்கும் என்ன நடந்திச்சுன்னு ஆள் ஆளுக்கு நடக்காத பல விஷயங்களை சோசியல் மீடியாவில் எழுத தொடங்கி வருகிறார்கள். இமான் அவர்கள் கொடுத்த பேட்டிக்கு பிறகு இது பற்றி தற்பொழுது இமான் அவர்கள் முதல் மனைவி பதில் அளித்து உள்ளார்.
அதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இமான் விவரகாரத்து செய்தார். பிள்ளைகள் மீது அவருக்கு பாசம் கிடையாது. விவாகரத்துக்கு சம்மதிக்காவிட்டால் அரசியல் பலத்தை வைத்து ஏன் தந்தையை கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்க அதன் பின் 46 நாட்களில் விவாகரத்து பெற்றார். பிள்ளைகள் வேண்டுமா அல்லது பணம் வேண்டுமா என்று கேட்டார்கள் எனக்கு என் பிள்ளைகள் தான் வேண்டும் என்று பிள்ளைகளை அழைத்து வந்துவிட்டேன். விவகாரத்துக்காக எந்த ஒரு தொகையையும் பெறவில்லை.
இமான் விவரகத்துக்கு முன்பே இரண்டாம் திருமணத்திற்கு பெண்ணை பார்த்து வைத்து விட்டு என்னை விவாகரத்து செய்து விட்டு உடனே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிள்ளைகளிடம் கூட திருமணம் பற்றி கூறவில்லை.
சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர் அவர் தான் எங்களது விவாகரத்து குறித்து பஞ்சாயத்து செய்து வந்தார். சிவகார்த்திகேயனுக்கு இமான் அவர்களின் விவாகரத்து முடிவு பிடிக்கவில்லை. விவாகரத்து நடந்துவிட கூடாதுனு சமாதானம் செய்து வந்தார்.
இமான் விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஒதுக்கவில்லை குடும்பம் பிரிந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று சிவா எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். கடைசியில் இப்படி சிவாவை பற்றி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். இதனை பார்த்தால் சிவா குடும்பத்தினர் நிச்சயம் வருத்தப்படுவார்கள். இது சிவகார்திகேயன் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று இமான் யோசிக்கவே இல்லை.
இமானுக்கு இப்போது படவாய்ப்புகள் இல்லை அதனால் விளம்பரத்துக்காக இப்படி செய்து உள்ளார் என்று நினைக்கிறன் சிவகார்த்திகேயன் பாவம்ங்க அந்த நேரத்துல சமாதானம் பேசுனர் அப்போது தான் நான் அவரிடம் பேசுனேன் . இப்போதெல்லாம் அவர்கிட்ட பேசுறதே இல்ல என்று உருக்கமாக கூறி உள்ளார் இமான் முதல் மனைவி மோனிகா.