தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. நடிகர் சிம்புவின் இனோவா கார் விபத்தில் சிக்கி முதியவர் மீது கார் மோதியதில் அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.ராஜேந்தர்.
அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பேத்தியை மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது அவரது டிரைவர் முதியவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நிலையில் விபத்தில் சிக்கிய முதியவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் போன் செய்து ஆம்புலன்ஸ் வந்தவுடன் முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டி.ராஜேந்தர் உதவியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு விபத்தில் காயமடைந்தவர் முனுசாமி என்ற முதியவர் சக்கர நாற்காலி உதவியுடன் சாலையை கூர்ந்து செல்வார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்தியதால் மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டி.ராஜேந்தர் அவரின் டிரைவர் செல்வம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் விபத்தின் போது நடந்த நிகழ்வுகளை விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகாமையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் முனுசாமி ஊர்ந்து நடுரோட்டில் செல்வதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அவர் ஊர்ந்து சென்றதால் டிரைவர் செல்வம் அதனை கவனிக்க தவறி விட்டதாகவும் கூறப்படுகிறது.