பாஜக ஆதரவாளர் பதிவிட்ட பதிவு ஒன்றுக்கு நடிகர் சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை வெளுத்து விளாசியுள்ளார். நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு நடைபெறாது அதனை நடத்தவிடாமல் தடுப்போம் என வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் நீட் தேர்வு நேற்று நடைபெற்ற உள்ளது நீட் தேர்வு பயத்தினால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவத்தை கண்டித்து பலரும் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் சித்தார்த் சமீபகாலமாக ட்விட்டர் பக்கத்தில் காரசார விவாதங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பாஜக ஆதரவாளரான செல்வகுமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த் பெயரை குறிப்பிட்டு திமுகவின் வாக்குறுதிகளை குறிப்பிட்டு ஐயா சித்தார்த் அவர்களே என்ன பண்ணப் போறீங்க என்று பதிவிட்டுள்ளார்.
அதனை கண்டு கொந்தளித்த சித்தார்த் உனக்கு வேணும்னா நீ போய் கேளு என்றும் பாஜக சாக்கடையில் தான் மலரும் எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ட்விட்டர் பக்கத்தை டாய்லெட்டில் எச்சரிக்கைகளை என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.