Sunday, May 5, 2024
-- Advertisement--

நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது கவுண்டமணி செந்தில் அவர்களின் நகைச்சுவை தான். நாம் எப்போது எந்த நேரத்திலும் அவர்களின் நகைச்சுவை பார்த்தாலும் நம்மை அறியாமலே நமக்கு சிரிப்பு வரும். செந்தில் செய்யும் சேட்டைகள் அதற்கு கவுண்டமணி கொடுக்கும் கவுண்டர்கள் எல்லாம் இன்றுவரை ரசிக்கக்கூடிய நகைச்சுவையாக இருக்கும்.

அப்படிப்பட்ட நகைச்சுவை நடிகர் செந்தில் (வயது 70 ) அவர்களுக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகர் செந்தில் அதிமுக கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சில நாட்களாக கொரானா அறிகுறிகள் செந்திலுக்கு இருந்துள்ளது உடனே கொரோனா பரிசோதனை செய்து பார்த்த நடிகர் செந்தில் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நடிகர் செந்திலுக்கு கொரோனாவிற்கான தீவிர சிகிச்சை கொடுத்து வருகிறார்கள் மருத்துவர்கள். செந்தில் மட்டுமல்லாமல் செந்தில் உடைய குடும்பத்திற்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் நமக்கு கிடைத்த தகவல் படி செந்தில் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி அவர்களும் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

விரைவில் செந்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles