நாய் சேகர் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்தில் டைட்டில் தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் வைகைப்புயல் வடிவேல்.
இயக்குனர் சிராஜ் இயக்கத்தில் நடித்துவரும் அவர் தனது படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பு வைக்க விருப்பப்பட்டார் ஆனால் அந்த தலைப்பு AGS நிறுவனத்திடம் இருந்தது ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் சதீஷை வைத்து நாய் சேகர் என்ற படத்தை கிட்டத்தட்ட 80% முடித்துவிட்டதாக மீதமுள்ள சில போஸன்கள் மட்டும் ஷூட் செய்து வருகிறார்கள்.
நாய் சேகர் டைட்டில் எப்படி கொடுப்பது என்று மறுத்து விட்டார்கள் அதனால் கொஞ்சம் அப்செட் ஆன நடிகர் வடிவேலு அவர்கள் சிராஜ் கூட்டணியில் தான் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று பெயரை வைத்து ஒரிஜினல் என்று குறியீடு உடன் போஸ்டர்களை ரிலீஸ் செய்து இருந்தார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரி என்ட்ரி கொடுக்கும் வடிவேலு தனக்கு நாய் சேகர் டைட்டில் தான் பொருந்தும் அது எனக்குத் தெரிந்தவர்களிடம் தான் இருக்கிறது வாங்கி விடுவேன் என்று நம்பிக்கையாக கூறினார் ஆனால் கடைசி வரை எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த டைட்டிலை வாங்க முடியவில்லை.
தற்பொழுது சதீஸ் அவர்கள் ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது இந்த படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி படம் பவித்ரா நடித்திருக்கிறர். ஓய்வில்லாமல் சூட்டிங் சென்று கொண்டிருப்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் ஷேர் ஒன்றில் உட்கார்ந்த நிலையில் தூங்கினார் பவித்ரா அப்பொழுது செல்போன் அளவிற்கு ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு பவித்ரா உன்னிடம் சிவகார்த்திகேயன் பேச வேண்டுமாம் என்று கூறினார் சதிஷ். அந்தக் கட்டையை செல்போனை என்று நினைத்துக்கொண்டு பவித்ரா காதில் வைத்துக்கொண்டு ஹலோ என்று சந்தோசமாக பேசினார்.
அதன்பின் அது கட்டை என்று தெரிந்தபின் தூக்கி எறிந்தார். பவித்ராவை கிண்டல் செய்து சதீஷ் சிவகார்த்திகேயன் பேசுகிறார் என்று சொன்னவுடனே என்ன ஒரு ஆனந்தம் என்று கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.