நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே சத்யராஜ் அவர்கள் திரைப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாகவும் ஜாலியாகவும் இருக்கும் சினிமா வட்டாரத்தில் சத்யராஜ் அவர்களை பற்றி கேட்டாலே லொள்ளு பிடித்த மனிதர் என்று செல்லமாக அவரை அழைப்பார்கள்.
அந்த அளவிற்கு மனிதர் அனைவரையும் நகைச்சுவையாக கிண்டல் செய்து விடுவார். ஒரு நேரத்தில் ஹீரோவாக கொடிகட்டிப் பறந்த சத்யராஜ் சமீபகாலமாக சத்யராஜ் அவர்கள் ஹீரோயினுக்கு தந்தையாகவும், ஹீரோவிற்கு தந்தையாகவும் நடிக்கத் தொடங்கி விட்டார் கதை கேட்டு அந்த கதாபாத்திரம் பிடித்துவிட்டால் உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்கும் சத்யராஜ் அவர்கள் சத்தமில்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மனிதருக்கு வயது 67 இன்றும் செம ஸ்டைலாக சிலம்பம் சுத்துகிறார்.
எம்ஜிஆர் மற்றும் பெரியார் அவர்கள் மீது தீவிர பற்று உடைய சத்யராஜ் இன்றுவரை மறைமுகமாக பல உதவிகளை செய்து வருகிறார் குறிப்பாக விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சத்யராஜ் குரல் கொடுக்காமல் இருந்ததே இல்லை அந்த அளவிற்கு விவசாயிகள் மீது பாசம் வைத்திருக்கிறார் மனிதர்.
சத்யராஜ் அவர்களின் மகன் சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் மகள் திவ்யா. சத்யராஜ் அவர்களுக்கு ஊட்டி குன்னூரில் ஒரு எஸ்டேட் ஒன்று உள்ளது அதில் ஒரு பெரிய பங்களாவை கட்டி வைத்துள்ளார் சத்யராஜ்.
பங்களா குறித்து சத்யராஜின் மகள் திவ்யா அவர்கள் கூறியிருப்பது சூடான வதந்திகள், சூடான ஆடைகள், சூடான காபி, குளிர் காற்று, நீண்ட காலணி, காட்டு வாழ்க்கை, காட்டு வேடிக்கை, சைக்கிள் ஓட்டுதல், பைக் சவாரி, குதிரை சவாரி, ஜீப் சவாரி, சிவப்பு ஒயின், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, விடுமுறை மற்றும் வரம்பற்ற உற்சாகம் – இவை சில விஷயங்கள் எஸ்டேட்டில் உள்ள எங்கள் குன்னுர் வீட்டை நினைக்கும் போது என் நினைவுக்கு வருகிறது… எனக்கு பிடித்த விடுமுறை இடம் என்று கூறி புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.