Monday, May 6, 2024
-- Advertisement--

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பற்றி கண்ணீர்விட்டு அழுத சரத்குமார்…!

நாடெங்கும் பரவி வரும் வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பலர் இதனால் பலர் பாதிப்படைந்து வருகின்ற நிலையில் மூன்றாவது கட்டமாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பலர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சினிமா துறையிலும் அதன் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் வீட்டிலேயே பொழுதைக் கழித்து வரும் பிரபலங்கள் மற்றொரு பிரபலதுடன் ஆன்லைன் மூலமாக உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் ஆன்லைன் மூலமாக தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். இந்தப் பேட்டியில் தெலுங்கு உலகின் மெகா ஸ்டார் ஆக இருக்கும் சிரஞ்சீவி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சரத்குமார் அவர் எனது நீண்ட கால நண்பர் என்றும் கூறினார்.

மேலும் சிரஞ்சீவியுடன் தன் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றையும் பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டார். அதில் நான் பண பிரச்சினையில் ஒரு காலம் இருந்தேன், அப்பொழுது தயாரிப்பாளர் ஒருவர் சிரஞ்சீவி இடம் தேதி வாங்கி கொடுங்கள், அவரை வைத்து பணம் எடுத்து அவரை வைத்து படம் எடுத்து அதில் இருந்து வரும் லாபத்தை உங்களுக்கு நான் கொடுக்கிறேன் என்றார். உடனடியாக சிரஞ்சீவியை சந்திக்க நான் ஹைதராபாத் சென்றேன்.

பட சூட்டிங்கில் இருந்த சிரஞ்சீவி என்னை கண்டதும் நான் அவளிடம் தனிமையில் பேசவேண்டும் என்று கூறினேன். உடனடியாக வீட்டிற்கு என்னை அழைத்து சென்று முதலில் சாப்பிட வைத்த அதன் பின்னர்தான் என்ன பிரச்சினை என்று கேட்டார், கைவசம் இருக்கும் படங்களை முடித்த பிறகு எனக்கு படம் பண்ணித்தர தேதி தருவதாகவும் உறுதியளித்தார். உங்கள் சம்பளம் என்னவென்று கேட்டதற்கு உனக்கு பிரச்சனை என்று சொன்னாயே, எனக்கு எந்த சம்பளமும் வேண்டாம் உங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறினார். இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் என்று கூறிய சரத்குமார் கண்கலங்கி உருக்கமாக பேசினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles