Saturday, April 27, 2024
-- Advertisement--

மாநாடு படம் பார்த்துவிட்டு மிரண்டு போய் தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த்…!!! மாநாடு படத்தை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. தீபாவளி அண்ணாத்த திரைப்படத்துடன் மாநாடு திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உதயநிதி ரெட் ஜெயின்ட் நிறுவனம் அண்ணாத்தை திரைப்படத்தை வெளியிட்டதால் மாநாடு திரைப்படம் வெளியிட தாமதம் ஆனது.

மாநாடு திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளுக்கு செல்வோர் 2 டோஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம் என தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மேலும் அதிர்ச்சி உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து மேலும் பல சிக்கல்கள் தாண்டி மாநாடு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர்.

மாநாடு திரைப்படத்தில் TIME Loop கான்செப்ட் முறையில் திரைப்படம் உருவாக்கி உள்ளது. இப்படத்தில் “வந்தான்.. சுட்டா.. ரிப்பீட்டு..” என்ற வசனம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வெங்கட்பிரபுவை தொடர்புகொண்டு மாநாடு படம் மாஸாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதோடு வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தொடர்பு கொண்ட செய்தியை மகிழ்ச்சியுடன் வெங்கட்பிரபு ட்விட்டர் பக்கத்தில் இதுதான் மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டுள்ளார். அதேபோல் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பாராட்டியதை மகிழ்ச்சியுடன் பதிவில் வெளியிட்டு உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles