நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஐ சி யு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர். அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது பெற்றார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரசிகர்கள் இப்படத்தை காண மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அண்ணாத்த திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளனர். சௌந்தர்யா மகன் வேத் ரஜினியுடன் அமர்ந்த அண்ணாத்த திரைப்படத்தை பார்த்து உள்ளார். இந்த செய்தியை ரஜினி வுட் ஆப்பின் மூலம் தனது குரலில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து லதா ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் தெரிவித்தார். ரஜினி நலமுடன் உள்ளார் ரஜினிக்கு ஒவ்வோராண்டும் எடுக்கப்படும் உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது வழக்கம் என்று கூறினார்.
ரத்த குழாயில் போதிய ரத்தம் கிடைக்காமல் உள்ளது.மேலும் போதிய ரத்தம் கிடைக்காததால் ரத்த நாள திசுக்கள் அழிந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஆனால் ரஜினிகாந்திற்கு லேசாக காய்ச்சல் இருந்ததால் நேற்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் இரவு முழுவதும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.