சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் நரேன். இவரது இயற்பெயர் சுனில் குமார் ஆகவும். படத்திற்காக தன் பெயரை நரேன் என மாற்றி கொண்டார். இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திய படம் அஞ்சாதே. இந்த படத்தில் பாண்டியராஜ், பிரசன்ன போன்றோர் நடித்து இருப்பர். இந்த படத்திற்கு பிறகு சமீபத்தில் இவர் கார்த்தி நடித்த கைதி படத்தில் நடித்து இருந்தார்.
நரேன் மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தன்மையா என்ற மகளும் உள்ளார். இந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் உள்ள வருகிறது. இதோ அந்த புகைப்படம்.