தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மயில்சாமி. எந்த ஒரு நகைச்சுவை என்றாலும் அதில் மயில்சாமி அவர்களை நடிக்க வைத்து விடுவார்கள் காரணம் அவருடைய கலகலப்பான நகைச்சுவை பேச்சு தான். எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரான மயில்சாமி பல சமூக சேவைகளை தன்னால் முடிந்தவரை செய்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் விவேக் மறைவின் போது மயில்சாமி அவர்கள் கடைசிவரை முன் நின்றார். எப்படி நான் எம்ஜிஆர் அவர்களுக்கு தினமும் மாலை போடுகிறேனோ அதுபோல விவேக் அவர்களின் நினைவாக தினமும் ஒரு மரம் நட போகிறேன் என்று சபதம் எடுத்தார்.
அதன்பின் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார் நகைச்சுவை நடிகர் மயில்சாமி. நான் சென்னையில் 42 வருடங்களாக இருக்கிறேன் என்னுடைய ஒரே தலைவர் எம்ஜிஆர் தான் அவரை தவிர வேறு ஒரு தலைவரை என்னால் ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை. என் மீது பிற கட்சிகளுக்கு கோபம் இருக்கலாம் ஆனால் நான் யாருக்கும் விரோதி இல்லை விருகம்பாக்கம் மக்களுக்கு என்னை தெரியும் அதனால் மக்களுக்கு களம் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடுகிறேன் என்று கூறியிருந்தார்.
நேற்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது அதில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டி போட்டு இருந்த நடிகர் மயில்சாமி 1440 ஓட்டுக்கள் கிடைத்திருந்தது.
இதுகுறித்து மயில்சாமி கூறுகையில் 1440 பேர் எனக்காக வாக்களித்துள்ளார்கள். எனக்கு சந்தோசம் தான். விஜயகாந்தின் கட்சி வேட்பாளருக்கே எனக்கு சமமான வாக்குகள் கிடைத்திருக்கிறது எந்தக் கட்சியிலும் சேராமல் சுயேச்சையாக போட்டியிட்ட எனக்கு மக்கள் ஆதரவை கொடுத்தது எனக்கு சந்தோஷம்தான் மக்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார் மயில்சாமி.