சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிவர் புயலால் சென்னையில் சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் சென்னை முழுவதுமே வெள்ளக்காடாக உள்ளது. செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் அந்த ஏரி திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் கரைகள் உடைந்து உள்ளன.
பல பகுதிகளில் மழைநீர் வெளியேற வசதி இல்லாததால் குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல பகுதிகளில் மழை புகுந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மழையில் துடுப்பு போட்டு செல்லும் மன்சூரலிகான் “எனக்கு ராஜாவா தான் வாழுவேன்” என்றும் ” மழையே மழையே தமிழ்நாட்டை விட்டுவிடு” எனும் பாடிக் கொண்டே செல்வது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.