Sunday, April 28, 2024
-- Advertisement--

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மாதவன் குடும்பம்..!!! உருக்கமாக நன்றி தெரிவித்த மாதவன்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அரசு.

கொரோனா பரவ முக்கிய காரணம் முக கவசத்தை மக்கள் மறந்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள். முகக் கவசம் அணிந்தால் பரவாமல் இருக்காது என்பதை விட கொரோனா பரவாமல் தற்காத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனாவால் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரபலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். இன்று நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்ற செய்தி வந்தது.

அதுபோல பிஜேபி துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டார் என்ற செய்தி வந்தது. பிரபலங்கள் இது போல செய்திகளை தொடர்ந்து மக்களிடம் தெரியப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் மாதவன் அவர்கள் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். கொரோனவினால் பாதிக்கபட்டுளேன் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்று கூறி இருந்தார். அவரை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த மாதவன் எனக்காக பிராத்தனை செய்து கொண்ட அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. தற்பொழுது குடுமபத்தினர் அனைவர்க்கும் கொரோனா நெகடிவ்.

அம்மா உட்பட அனைவர்க்கும் நெகடிவ் வந்து உள்ளது. முன்னெச்சரிக்கையாக, வீட்டிலும் மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறோம். கடவுள் அருளால் அனைவரும் நலமுடன், ஆரோக்கியமாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles