Friday, April 26, 2024
-- Advertisement--

ஒரே நாளில் மூன்று படங்கள்… செம ஹாப்பியான செய்தியை பதிவிட்ட நடிகர் கார்த்தி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

தற்போது கார்த்தி நடித்து வெளிவர உள்ள திரைப்படங்கள் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் விருமன் படத்தில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமான உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் நடித்து வெளிவந்த பையா, கொம்பன், சுல்தான் போன்ற படங்கள் ஏப்ரல் 2ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது. இதனைக் குறிப்பிடும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் பையா தனக்கு புதிய கண்ணோட்டத்தை கொடுத்தது, கொம்பன் திரைப்படம் மீண்டும் என்னை கிராமத்திற்கு அழைத்துச் சென்றது, சுல்தான் திரைப்படம் என்னை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றி என பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles