நடிகர் கமலஹாசன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று வந்த நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கமலஹாசன் சில தினங்களில் குணமடைந்து வீடு திரும்பினார். அதைத்தடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை முடிந்தபின் என்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.