தனுஷ் நடிப்பில் அசுரன் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர். ஆரம்பத்தில் இவரை எல்லாம் எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொள்வது என்று நினைத்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பால் வாயடைத்துப் போக வைத்தார் தனுஷ்.
துள்ளுவதோ இளமை என்ற முதல் படத்தில் ஷெரினுடன் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ் அதன்பிறகு நல்ல நடிக்கக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். தனுஷின் காதல் கொண்டேன் என்ற திரைப்படம் இவருக்குள் இருக்கும் நடிகரை வெளிக்கொண்டு வந்தது.
முதலில் வேலைக்கு போகாத வெட்டிப் பையனாகவும் தந்தையிடம் திட்டு வாங்கும் பையனாகவும் நடித்து வந்த கொஞ்சம் கொஞ்சமாக கமர்சியல் படங்களை விட்டு விலகி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கினார். சோனம் கபூருடன் ஜோடி சேர்ந்து ராஞ்சனா என்ற ஹிந்தி படம் ஒன்றில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன் வெளியான அசுரன் திரைப்படம் இவருடைய நடிப்பை வேறொரு பரிமாணத்திறகு கொண்டு சென்றது. நடிப்பின் அசுரன் தனுஷ் என்றெல்லாம் ரசிகர்கள் அசுரன் படத்தை பார்த்தபின் கொண்டாடி வந்தார்கள். அதன் பின் வெற்றிமாறனின் வடச்சென்னை படத்தில் நடித்திருந்தார் தனுஷ் அந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் தனுசுக்கு இதுவரை இல்லாத பெரிய வரவேற்பு கொடுத்தது தற்பொழுது தனுஷ் துருவங்கள் பதினாறு என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அவர்கள் இயக்கத்தில் மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார் அந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் தனுஷ்.
தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு நேரடி படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்திற்கு பெயர் வாத்தி என்று வைத்துள்ளார்கள் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி என்று பாடம் கற்றுத்தரும் வாத்தியாரை மாணவர்கள் அழைப்பது சிலருக்கு வருத்தமாக இருந்தது. மாணவர்களும் வாத்தி என்று வாத்தியாரை மரியாதை இல்லாமல் கூறுவது போல இருக்கிறது என்று பலர் கூறி வந்தார்கள்.
இந்நிலையில் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்கு வாத்தி என்று டைட்டிலை வைத்துள்ளார். ஹிந்தியில் சார் என்று டைட்டில் வைத்துள்ளார். இன்று வெளியான அறிவிப்புக்குப் பிறகு பலர் வாத்தி என்ற டைட்டிலை தயவுசெய்து மாற்றுங்கள் என்று கூறி வருகிறார்கள்.