பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மரணமடைந்துள்ளார் என்று செய்தி வெளிவந்துள்ளது. மாணிக்க விநாயகம் அவர்களுக்கு தற்பொழுது வயது 78 ஆகிறது.
இதயக் கோளாறு இருந்ததாகவும் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மறைந்த மாணிக்க விநாயகம் அவர்கள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் குறிப்பாக தமிழில் தளபதி விஜயின் திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடல், தூள் படத்தில் இடம்பெற்ற விக்ரமின் ஓபனிங் சாங் கொடுவா மீசை அறுவா பார்வை என்ற பாடல் பாடியது மாணிக்க விநாயகம் அவர்கள் தான்.
பாடகர் மட்டுமல்ல திருடா திருடி என்ற படத்தில் தனுசுக்கு தந்தையாக நடித்த அவருக்கு அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தளபதி விஜயின் வேட்டைக்காரன் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்திரந்தார்.
அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய மாணிக்க விநாயகம் அவர்கள் தற்பொழுது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது சினி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.