புனித் ராஜ்குமார் நடிகர் என்பதை தாண்டி பல நல்ல செயல்களை செய்து விட்டு சத்தமில்லாமல் இந்த உலகை விட்டுப் பிரிந்துவிட்டார். தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு புனித் ராஜ்குமார் அவர்கள் செய்த உதவி அவர் இறந்த பிறகுதான் தெரிய வருகிறது அந்த அளவிற்கு தான் செய்யும் உதவி விளம்பரமாக இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் புனித் ராஜ்குமார்.
ஒரு நடிகர் மீது இவ்வளவு அன்பு வைக்க முடியுமா என்று அனைவரையும் வியக்கவைத்தது இவருடைய இறுதிச்சடங்கில் கூடிய கூட்டம். தன்னுடைய தந்தை ராஜ்குமார் பெரிய நடிகர் என்றாலும் தானும் தன் தந்தையைப் போல நல்ல நடிகராக வரவேண்டும் என்ற ஆசையோடு சினிமாவில் அறிமுகமாகி தன்னை சினிமாவிற்காக அர்ப்பணித்துக்கொண்ட புனித் கன்னட சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே சத்தமில்லாமல் வைத்து இருந்து இருக்கிறார்.
அப்பு என்ற படத்தில் நடித்த புனித் ராஜ்குமார் அந்த படத்திற்கு பிறகு மக்கள் அவரை செல்லமாக அப்பு என்று அழைக்கத் தொடங்கினார்கள் புனித் ராஜ்குமார் என்று கூறுவதைவிட அப்பு என்றே அனைவரும் செல்லமாக அழைக்க ஆரம்பித்தார்கள்.
புனித் இறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அவரைப் பற்றிய நினைவுகளும் அவரைப் பற்றிய செய்திகளும் இன்றும் இணையத்தில் பார்க்க முடிகிறது. கர்நாடகாவில் புனித் சமாதிக்கு சென்று இன்றும் அவருடைய ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடற்பயிற்சி செய்து தனது உடலை கனகச்சிதமாக வைத்திருந்த மனிதரை எப்படி கடவுள் சீக்கிரமே அழைத்துக் கொண்டார் என்று இன்றும் வருந்தி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் புனித் அவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இளம் வயதில் புனித்தை தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படத்தில் கூட புனித்தின் முகம் சற்று கூட மாறவே இல்லை அப்படியே இருக்கிறது என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
அர்ஜுன் வெளியிட்ட புகைப்படத்துடன் சில வரிகளையும் பதிவிட்டு உள்ளார் அதில் ஒரு சில விஷயங்கள் மட்டும் மூழ்காது மை டியர் அப்பு நித்தியமானவர் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் அர்ஜுன்.