Saturday, May 11, 2024
-- Advertisement--

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து…!!! கால் உடைந்து வீல்சேரில் அமைந்திருக்கும் போட்டியாளர்..

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு காலில் அடிபட்டு உள்ளது. இவர் நடக்க முடியாமல் வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களிலேயே பைனல் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும் இந்த முறை கடுமையான போட்டிகள் வைக்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட்கார்டு என்ட்ரியாக ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி, அவரோடு KPY சதீஷ் என இருவரும் வழிகாட்டியாக வந்தனர் அதன்பின்னர் KPY தீனா சாண்டி மாஸ்டர் மற்றும் ரம்யா பாண்டியன் வந்துள்ளனர்.

பின்னர் கடந்த வாரம் பணத்துடன் வெளியேறும் வாய்ப்பை சுருதி பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். மேலும் பல போட்டிகள் நடத்தப்பட்ட பின்னரே பணம் வழங்கப்பட்டது. மேலும் ஸ்ருதி வெளியே சென்றபோது 25 லட்சத்துடன் மேடையில் தோன்றிய பின்பு அந்த பணத்தை பெற டாஸ்க் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க போட்டிகள் கடுமையாக போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் ஹவுஸ் மேட் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக டாஸ்கின் போது நிரூப்க்கு அடிபட்டது. இதனிடையே இன்று வெளியான ப்ரோமோவில் ரம்யா பாண்டியன் காலில் கட்டுப் போட்டு வீல்சேரில் அமர்ந்திருக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. நடிகை ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் ரம்யாவுக்கு என்னாச்சு என கேட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles