யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் சில்க் ஸ்மிதா என்று சொல்லலாம் அந்த அளவிற்கு தாராளம் காட்டி நடித்து வந்தார் குறிப்பாக ஏடாகூடமான படமொன்றில் நடித்தது பெரிய பிரபலத்தை அடைந்தார்.
ஷூட்டிங் முடித்து விட்டு தனது நண்பர்களுடன் ஈசிஆர் சாலையில் கார் வேகமாக கார் ஒட்டி சென்றதால் சாலை விபத்தில் சிக்கினார்.
சம்பவ இடத்திலேயே அவருடைய நெருங்கிய தோழியான பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகாவிற்கு ஏகப்பட்ட உள்காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்த பின் படிப்படியாக குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் அதுமட்டுமல்லாமல் கடை திறப்பு விழா, திருமண விழா என்று அனைத்திலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் யாஷிகா அவர்கள் டாக்டர் சரவணன் அவர்களின் மகனின் திருமண விழாவில் கலந்து கொண்டார் யாஷிகா. அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு திருமண நிகழ்ச்சியை நடத்திவைத்தார். அந்த திருமணத்தில் சினிமா பிரபலங்களின் வருகை அதிகமாக இருந்தது அனைவரையும் கவனிக்க வைத்தது.
சோனியா அகர்வால் யாஷிகா வருகை அங்கு வந்து இருப்பவரை குஷி படுத்தியது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு யாஷிகாவை பார்த்தவுடன் அனைவரும் செல்பி எடுக்க முன்வந்தார்கள். யாஷிகாகவும் சலித்துக் கொள்ளாமல் தன்னிடம் செல்பி எடுக்க வரும் ரசிகர்களிடம் மும்மரமாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
யாஷிகா வந்ததை அறிந்த போட்டோகிராபர்கள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டு உண்டார்கள். யாஷிகா விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோகிராஃபர் கடுமையான தீனியும் போட்டார். சூழ்ந்த ரசிகர்களிடம் இருந்து வெளியே வருவதற்குள் படாதபாடு பட்டதாக தகவல்.