Tuesday, May 21, 2024
-- Advertisement--

தங்கமான மனுஷன் வாரி வழங்கிய கர்ணன்…!!! விரைவில் குணமாகி வர வேண்டும் விஜயகாந்த் குறித்து உருக்கமான பதிவை பதிவிட்ட சூரி.

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார் அரசியலில் புலி போன்ற பாய்ந்து விஜயகாந்த் உடல்நிலை காரணங்களால் அரசியலை விட்டு சற்று ஒதுங்கி உள்ளார். தேமுதிக கட்சியினை விஜயகாந்தின் ஆலோசனை பெற்று அவரது மனைவி மற்றும் மகன்கள் நடத்தி வருகிறார்கள்.

விஜயகாந்த் அவர்களுக்கு பல வருடங்களாக நீரிழிவு நோய் இருந்ததால் சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் அவர்களின் வலது கால் விரல்கள் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. விரல்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சாரி இல்லாததால் அந்த விரல்களை எடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் இறந்து விட்டதாகவும் சில விஷக்கிருமிகள் யூடியூபில் பதிவிட்டு வந்தனர் இதனை பார்த்து மனம் நொந்து போன விஜயகாந்த் குடும்பத்தினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது ஒருபுறமிருக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்திற்கு தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் நலம் விசாரித்து வந்தார் கள் அரசியல் பிரபலங்கள்.

விஜயகாந்த் தரப்பும் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் வந்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருந்தனர்.

அனைவரும் விஜயகாந்த் அவர்களின் பண்புகளையும் அவர் மனித நேயத்தையும் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர் இந்நிலையில் நடிகர் சூரி அவர்கள் சமீபத்தில் விஜயகாந்த் பற்றி பகிர்ந்துள்ளார் அதில் அவர் தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்! என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles