நயன்தாரா என்ற படத்தில் சரத்குமார் ஜோடியாக அறிமுகமானார் அதன்பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. பல காதல் தோல்விகளை சந்தித்தாலும் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வந்தார் நயன்தாரா.
ஒரு நேரத்தில் திரிஷாவிற்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் அனைத்தும் நயன்தாராவிற்கு வந்தது நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைத்து வந்தனர். கில்லி படத்தில் மூலம் அதிர்ஷ்ட ஜோடி என்று கருதப்பட்ட விஜய் திரிஷா ஆதி திருப்பாச்சி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து வந்தார்கள்.
குருவி படத்தின் கதாநாயகி நயன்தாரா என்று கூறிவந்த நிலையில் திரிஷா விஜய்யை ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து நீண்ட நேரம் பேசிய பின் அடுத்த நாள் வெளியானது குருவி படத்தில் திரிஷா தான் ஹீரோயின் என்று.
சரியாக பேசிக் கொள்ளாத நயன்தாரா திரிஷா சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்டனர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கூட நானும் பேசிக் கொள்ளாதது உண்மை தான் ஆனால் ஒரு நிகழ்ச்சியின் போது நாங்களே புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.
சமீப காலமாக நயன்தாரா WOMEN CENTRIC படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரிஷா தன்னிடம் கதை கூறுபவர்களிடம் நயன்தாராவைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.
நயன்தாரா த்ரிஷா இடையே ஏற்கனவே சில மனக்கசப்புகள் இருந்து வந்த நிலையில் நேற்று நயன்தாராவின் திருமணத்திற்கு அனைத்து பிரபலங்களும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து தங்களது வாழ்த்தினை பதிவிட்டு வந்தனர் ஆனால் திரிஷா இதுவரை எந்த ஒரு வாழ்த்தும் சொல்லாதது நயன்தாரா தரப்புக்கு சற்று வருத்தமே என்கிறார்கள் சினி வட்டாரத்தினர்.