நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட் திருமணம் மும்பையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மறைந்த நடிகர் ராஜ்கபூரின் பேரனும் நடிகர் ரிஷி கபூர் மகனுமான ரன்பீர் கபூர் ஹிந்தியில் முன்னணி நடிகராக உள்ளார்.
இவர் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், நடிகையுமான ஆலியா பட்டை காதலித்து வந்தார். இவர்கள் சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் ஆலியா பட்டின் பாட்டிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரது விருப்பத்தின் பெயரில் உடனடியாக திருமணம் செய்து வைக்க இருவீட்டாரம் முடிவு செய்தனர்.
அதன்படி மும்பையில் நேற்று முன்தினம் மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து ரன்பீர், அலியாவுக்கு நேற்று மாலை திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் நடிகர் சஞ்சய் தத், ஷாருக்கான், ரிதிக் ரோஷன், வருண் தவன், நடிகைகள் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், கத்ரீனா கைப், இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரன் ஜோகர் உட்பட திரையுலகினர் கலந்து கொண்டனர்.